திருவள்ளுவரின் திருக்குறள்

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்.



இயற்கையின் விருப்பமான அருளொடும், தீங்கு தராத அன்பொடும் கிடைக்காத பொருளின் ஆக்கத்தை முட்டாள்களே ஆள்வதற்கு விட்டுவிட வேண்டும்.



அருளோடும், அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.



பிறர்மீது இரக்கமும் அன்பும் இல்லாமல் சேர்க்கும் பணச் சேமிப்பை ஏற்காது விட்டு விடுக.



பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும்.


Wealth gained by loss of love and grace,
Let man cast off from his embrace.


(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.



aruLodum anpodum vaaraap poruLaakkam
pullaar puraLa vidal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஒன்றுமற்ற ஒருவரை மதிக்கச் செய்யும் பொருளே பொருள் இது இல்லை என்றால் யாரும் மதிப்பது இல்லை. இருள் அகற்றும் பொருள் இன்பமும் அறமும் திறமும் வளர்க்கும். அருள் என்ற அன்பின் குழைந்தையை பொருளே வளர்க்கும். குன்றின் மேல் நின்று யானையின் சண்டையை காண்பதைப் போல் தனக்கு பாதகமின்றி பொருளை அடைந்தால் அறமும் இன்பமும் இசைந்து இருக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.