திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நாடு / The Land

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.



நிறைந்த பொருள்களை பெற வாய்பளித்து, அருமையான உழைப்பால் தேவைகளை பூர்த்தி செய்வது நாடு.



மிக்க பொருள் வளம் உடையதாய், எல்லோரும் விரும்பத்தக்கதாய் கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.



மிகுந்த பொருளை உடையது; அதனால் அயல்நாட்டாரால் விரும்பப்படுவது; பெரும் மழை, கடும் வெயில், கொடு விலங்கு, தீய பறவைகள், முறையற்ற அரசு ஆகிய கேடுகள் இல்லாதது; அதிக விளைச்சலை உடையது; இதுவே நாடு.



பொருள் வளம் நிறைந்ததாகவும், பிறர் போற்றத் தக்கதாகவும், கேடற்றதாகவும், நல்ல விளைச்சல் கொண்டதாகவும் அமைவதே சிறந்த நாடாகும்.


That is a 'land' which men desire for wealth's abundant share,
Yielding rich increase, where calamities are rare.


A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.



perumporuLaal pettakka thaaki arungaettaal
aatra viLaivadhu naadu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தேவையற்றது விளையாமல் தகுதியவர்கள் கூடி இருப்பதும், பசி, பிணி, பகை, இல்லாமல் இருப்பதும் நாடு. ஊற்று நீரும், மழை நீரும், மலை அருவியும், அரனும் நாட்டிற்கு உறுப்புகள். எல்லாம் இருந்தும் நல்ல ஆட்சியாளர் இல்லை என்றால் பயன் இருக்காது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.