திருவள்ளுவரின் திருக்குறள்

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.



அன்புடன் இணைந்த செயல் என்பது சிறந்த உயிர்களின் உடம்புடன் உயிர் கொள்ளும் தொடர்பை போன்றது .



அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன்என்று கூறுவர்.



பெறுவதற்கு அரிய உயிருக்கு நம் உடம்போடு உண்டாகிய தொடர்பு, அன்போடு கொண்ட ஆசையின் பயனே என்று அறிந்தவர் கூறுவர்.



உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.


Of precious soul with body's flesh and bone,
The union yields one fruit, the life of love alone


They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth)



anpoadu iyaindha vazhakkenpa aaruyirkku
enpoatu iyaindha thodarpu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஒருவர் அன்பானவராக இருந்தால் அவரால் இரக்கத்தை மறைக்க முடியாமல் கண்களில் கண்ணிர் வழியும். தனக்கு என்று மறைக்காமல் தன் உயிரையும் அடுத்தவற்கு தரவல்லவராகவும், அடுத்தவருடன் ஒத்திசைவுடனும், ஆர்வமுடனும் இருப்பார்கள். இன்பமுடனும், அறம் காக்கும் பண்புடனும், உண்மையான உயிர் வாழ்தல் என்ற சிறப்புடனும் இருப்பார்கள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.