திருவள்ளுவரின் திருக்குறள்

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.



வாள் இருந்து என்ன பயன் வன்மையான குணம் இல்லாதவர்க்கு, நூல்களால் என்ன பயன் நுட்பமானவர்களின் கூட்டத்திற்கு அஞ்சுபவர்க்கு.



அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.



நெஞ்சுறுதி இல்லாதவர்க்கு வாளால் என்ன பயன்? அறிவுத்திறம் மிக்க அவைகண்டு பயப்படுபவர்க்குத் தர்க்க சாஸ்திர நூலால் பயன் என்ன?.



கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.


To those who lack the hero's eye what can the sword avail?
Or science what, to those before the council keen who quail?.


What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?.



vaaLoten van-kaNNar allaarkku nooloten
nuNNavai anju pavarkku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கூட்டத்தின் தேவை அறிந்து கற்றவர் முன்னும் அஞ்சாமல் பேச வேண்டும். போருக்கு போகும் துணிவை விட அவையில் பேசுவது கடினம். அறிவு பெற்றும் தக்க இடத்தில் பேசதாவர் அறிவற்றவரே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.