திருவள்ளுவரின் திருக்குறள்

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார்.



கற்றவர்களில் கற்றவர் என்பவர் கற்று அறிந்தவர்களின் முன் மேலும் கற்று அறியும்படியாக பேசுவார்.



கற்றவரின் முன் தாம் கற்றவைகளைச் அவருடைய மனதில் பதியுமாறுச் சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவார்.



தாம் கற்றவற்றை எல்லாம் பயப்படாமல் கற்றவர் அவையில் அவர் மனம் கொள்ளச் சொல்லும் திறம் பெற்றவர், கற்றவர் எல்லாரிலும் நன்கு கற்றவர் என்று பலராலும் சொல்லப்படுவார்.



கற்றவரின் முன் தாம் கற்றவற்றை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்ல வல்லவர், கற்றவர் எல்லாரினும் மேலானவராக மதித்துச் சொல்லப்படுவார்.


Who what they've learned, in penetrating words heve learned to say,
Before the learn'd among the learn'd most learn'd are they.


Those who can agreeably set forth their acquirements before the learned will be regarded as the most learned among the learned.



katraaruL katraar enappatuvar katraarmun
katra selachchollu vaar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கூட்டத்தின் தேவை அறிந்து கற்றவர் முன்னும் அஞ்சாமல் பேச வேண்டும். போருக்கு போகும் துணிவை விட அவையில் பேசுவது கடினம். அறிவு பெற்றும் தக்க இடத்தில் பேசதாவர் அறிவற்றவரே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.