திருவள்ளுவரின் திருக்குறள்

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.



நுட்பமானதை உணர்பவர்கள் அளக்கும் கருவி எது என பார்த்தால் கண்ணே அன்றி வேறு இல்லை.



யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.



நாங்கள் நுண் அறிவை உடையவர்கள் என்று கூறிக்கொள்பவர், பிறர் மனக்கருத்தை அளந்து அறியப் பயன்படுத்தும் அளவு கருவி எது என்று ஆய்ந்து பார்த்தால் அது கண்ணே அன்றி வேறு இல்லை.



நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை.


The men of keen discerning soul no other test apply
(When you their secret ask) than man's revealing eye.


The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else.



nuNNiyam enpaar aLakkungoal kaaNungaal
kaNNalladhu illai piRa


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பேசாத ஒருவரின் மன ஓட்டத்தை உணர்பவர் உலகின் அணியாவர், அவரை தெய்வமாக ஏற்க வேண்டும், அவரை நம் கூட்டத்தில் இணைக்க வேண்டும், அவருக்கு தனி இடம் தரவேண்டும், உள்ளத்தை முகம் பிரதிபளிக்கிறது. அது கண்களில் தெளிவாக அறியமுடிகிறது எனவே நுட்பமாக அளக்கும் அளவு கோலாக கண்கள் இருக்கிறது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.