திருவள்ளுவரின் திருக்குறள்

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.



குறிப்புகளை கேட்டு அதன் உள்நோக்கத்தையும் உணர்பவரை குழுவுக்குள் எப்பதவியாவது கொடுத்து உறுப்பினராக ஏற்க வேண்டும்.



(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.



தான் குறிப்புச் செய்ய, அதைக் கண்டு பிறர் முகத்தையும் கண்ணையும் பார்த்தே அவர் மனக்கருத்தைக் கண்டு சொல்லும் திறம் மிக்கவரைத் தன்னிடம் இருக்கும் செல்வங்களுள் எதைக் கொடுத்தேனும் துணையாக வைத்துக் கொள்ள வேண்டும்.



ஒருவரின் முகக் குறிப்பைக் கொண்டே அவரது உள்ளக் குறிப்பை அறிந்து கொள்ளக்கூடிய ஆற்றலுடையவரை, எந்தப் பொறுப்பைக் கொடுத்தாவது துணையாக்கிக் கொள்ளவேண்டும்.


Who by the sign the signs interprets plain,
Give any member up his aid to gain.


The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another.



kuRippiR kuRippuNar vaarai uRuppinuL
yaadhu koduththum koLal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பேசாத ஒருவரின் மன ஓட்டத்தை உணர்பவர் உலகின் அணியாவர், அவரை தெய்வமாக ஏற்க வேண்டும், அவரை நம் கூட்டத்தில் இணைக்க வேண்டும், அவருக்கு தனி இடம் தரவேண்டும், உள்ளத்தை முகம் பிரதிபளிக்கிறது. அது கண்களில் தெளிவாக அறியமுடிகிறது எனவே நுட்பமாக அளக்கும் அளவு கோலாக கண்கள் இருக்கிறது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.