திருவள்ளுவரின் திருக்குறள்

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.



ஐயம் இல்லாமல் அடுத்தவர் மனதை உணர்பவரை தெய்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.



ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.



அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.



ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.


Undoubting, who the minds of men can scan,
As deity regard that gifted man.


He is to be esteemed a god who is able to ascertain without a doubt what is within (one's mind).



aiyap padaaadhu akaththadhu uNarvaanaith
theyvaththoa toppak koLal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பேசாத ஒருவரின் மன ஓட்டத்தை உணர்பவர் உலகின் அணியாவர், அவரை தெய்வமாக ஏற்க வேண்டும், அவரை நம் கூட்டத்தில் இணைக்க வேண்டும், அவருக்கு தனி இடம் தரவேண்டும், உள்ளத்தை முகம் பிரதிபளிக்கிறது. அது கண்களில் தெளிவாக அறியமுடிகிறது எனவே நுட்பமாக அளக்கும் அளவு கோலாக கண்கள் இருக்கிறது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.