திருவள்ளுவரின் திருக்குறள்

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.



செயல்படுபவர் செயல்படுவதிலிருந்து பிற செயல்களையும் செய்துகொள்வதை எண்ணிப் பார்க்கையில் யானையை பயன்படுத்தி யானையைப் பிடிப்பது தோன்றுகிறது.



ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.



ஒரு செயலைச் செய்யும்போதே இன்னொரு செயலையும் செய்து கொள்வது மதநீர் வழியும் யானையால் இன்னொரு யானையைப் பிடிப்பது போலாம்.



ஒரு செயலில் ஈ.டுபடும்போது, அச்செயலின் தொடர்பாக மற்றொரு செயலையும் முடித்துக் கொள்வது ஒரு யானையைப் பயன்படுத்தி மற்றொரு யானையைப் பிடிப்பது போன்றதாகும்.


By one thing done you reach a second work's accomplishment;
So furious elephant to snare its fellow brute is sent.


To make one undertaking the means of accomplishing another (similar to it) is like making one rutting elephant the means of capturing another.



vinaiyaan vinaiyaakkik koadal nanaikavuL
yaanaiyaal yaanaiyaath thatru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சூழ்நிலை அறிந்து துணிந்தால் தீமைகளை தடுக்கலாம். இயல்பாக சில செயல் நடக்கும் எனவே இயல்பாகவும் இருக்கவேண்டும், தேவை என்றால் தகந்த கருவியுடன் செயல்பட வேண்டும். உடன் வருபவர் அஞ்சினால் அச்சத்தை போக்குவது பெரியவர்களின் பண்பு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.