திருவள்ளுவரின் திருக்குறள்

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.



இசைக்கருவிகள் இன்பமானது என்று கூறும் மக்கள் மழலைகளின் சொற்களை கேட்காதவர்கள்.



தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை நுகராதவரே குழலின் இசை இனியது யாழின் இசை இனியது என்று கூறுவர்.



பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர்.



தங்கள் குழந்தைகளின் மழலைச் சொல்லைக் கேட்காதவர்கள்தான் குழலோசை, யாழோசை ஆகிய இரண்டும் இனிமையானவை என்று கூறுவார்கள்.


'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,
Who music of their infants' lisping lips have never heard


"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children



kuzhalinidhu yaazhinidhu enpadham makkaL
mazhalaichchol KaeLaa thavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

ஒருவர் தனது வாழ்நாளில் பெற வேண்டியது அறிவில் சிறந்த குழந்தைகளே. அது பிறவித் துன்பத்தை துடைக்க வல்லது. நமது பிள்ளை என்றாலும் அதனதன் வினைப்பயன் அதனதனை தொடரும். குழந்தைகள் உண்ட மிச்சம் போன்ற அமிழ்து இல்லை, அவர்களின் குரல் போன்ற இனிமை எந்த இசையிலும் இல்லை. தன் குழைந்தைகளுக்கு நல்வாய்ப்பு எற்படுத்த வேண்டியது தந்தையின் கடமை. தாயும் தன் மகனை சான்றோன் என்பதில் மகிழ்சியடைவாள். குழந்தைகளும் தன் தந்தைக்கு நற்பெயர் பொற்று தரவேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.