திருவள்ளுவரின் திருக்குறள்

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.



வெறுக்கப்பட்டதை வெறுக்காமல் ஏற்று செய்தவருக்கு அச்செயல் முடிவு பெற்றாலும் பெருந்துன்பமே விளையும்.



ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கிவிடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கும், அச் செயல் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.



வேண்டா என்று உயர்ந்தோர் விலக்கிய செயல்களைத் தாமும் விலக்காது, பொருள் சேர்க்க எண்ணிச் செய்தவர்க்கு, அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பத்தையே தரும்.



தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும்.


To those who hate reproof and do forbidden thing.
What prospers now, in after days shall anguish bring.


The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.



katindha katindhoraar seydhaarkku avaidhaam
mutindhaalum peezhai tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

துணையால் வரும் நன்மை ஆக்கம் தரும் என்றால் செயல்படுவதால் தேவையான எல்லாம் தரும். எனவே செயல்படுதல் பெருமைக்காக இல்லாமல், இழிவானதாகவும் இல்லாமல் திடமாக இருக்க வேண்டும். சூழ்ச்சியால் சேர்க்கும் பொருள் சுடாத மண்பாத்திரத்தில் வைத்தது போல் கரையும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.