திருவள்ளுவரின் திருக்குறள்

ஒஓதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.



ஒழிக்க வேண்டும் உண்மை ஒளி மறைக்கும் செயல்களை மேன்மையை வேண்டுபவர்.



மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விட வேண்டும்.



உயர்ந்து விடவேண்டும் என்று முயல்பவர் தாம் வாழும் காலத்துத் தம் மேன்மையை அழிக்கும் செயல்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.



மேன்மேலும் உயர்ந்திட வேண்டுமென விரும்புகின்றவர்கள், தம்முடைய செயல்களால் தமது புகழ் கெடாமல் கவனமாக இருந்திட வேண்டும்.


Who tell themselves that nobler things shall yet be won
All deeds that dim the light of glory must they shun.


Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame).



oOdhal vaeNdum oLimaazhkum seyvinai
aaadhum ennu mava


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

துணையால் வரும் நன்மை ஆக்கம் தரும் என்றால் செயல்படுவதால் தேவையான எல்லாம் தரும். எனவே செயல்படுதல் பெருமைக்காக இல்லாமல், இழிவானதாகவும் இல்லாமல் திடமாக இருக்க வேண்டும். சூழ்ச்சியால் சேர்க்கும் பொருள் சுடாத மண்பாத்திரத்தில் வைத்தது போல் கரையும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.