திருவள்ளுவரின் திருக்குறள்

துணைநலம் ஆக்கம் த்ருஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும்.



நல்ல துணை சிறந்த வெற்றியை தரும், நல்ல செயல் தேவையான அனைத்தும் தரும்.



ஒருவனுக்கு வாய்த்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும், செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.



நல்ல துணை, செல்வம் தரும்; செயல் சுத்தமோ நாம் விரும்பிய எல்லாவற்றையும் தரும்.



ஒருவருக்குக் கிடைக்கும் துணைவர்களால் வலிமை பெருகும்; அவர்களுடன் கூடி ஆற்றிடும் நற்செயல்களால் எல்லா நலன்களும் கிட்டும்.


The good external help confers is worldly gain;
By action good men every needed gift obtain.


The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.



thuNainhalam aakkam tharu-um vinainhalam
vaeNdiya ellaanh tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

துணையால் வரும் நன்மை ஆக்கம் தரும் என்றால் செயல்படுவதால் தேவையான எல்லாம் தரும். எனவே செயல்படுதல் பெருமைக்காக இல்லாமல், இழிவானதாகவும் இல்லாமல் திடமாக இருக்க வேண்டும். சூழ்ச்சியால் சேர்க்கும் பொருள் சுடாத மண்பாத்திரத்தில் வைத்தது போல் கரையும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.