திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: சொல்வன்மை / Power of Speech

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.



வேண்டியதை சொல்வதும், அடுத்தவர் சொல்லின் பயனை கேட்டு அறிவதும், உன்னதத்தின் குறையற்றவர்களின் குறிக்கோள்.



பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லின் பிறர் சொல்லும் போது அச் சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.



பிறரிடம் பேசும்போது அவர் திரும்பவும் நம் பேச்சைக் கேட்க விரும்புமாறு பேச்சு; மற்றவர் பேச்சைக் கேட்கும் போது அவரது சொற்குற்றம் பரவாமல் பொருளை மட்டுமே பார்க்க; இதுவே மனக்குற்றம் அற்றவர்களின் சிறந்த கொள்கை.



மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.


Charming each hearer's ear, of others' words to seize the sense,
Is method wise of men of spotless excellence.


It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.



vaetpaththaanhj chollip piRarsol payan-koatal
maatchiyin maasatraar koaL


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நலம் அடைந்தவர் என்றால் சொல் வளம் பெற்றவர். சொல் வெல்லவும் விழ்த்தவும் செய்யும் என்பதால் திறனறிந்த சொல்ல வேண்டும். பல சொல்ல விரும்பாமல் மறுக்க முடியாதபடி சொல்லை சொல்ல வேண்டும். நல்வாசம் வீசும் செடியில் பூத்தும் வாசம் தராத மலர் பொன்றவர் தான் அறிந்ததை அடுத்தவர் உணரச் செய்யாதவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.