திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: சொல்வன்மை / Power of Speech

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.



கேட்பவரின் மனநோய் தீர்க்க உகந்தாதாகவும், கேட்காதவர் கேட்க விரும்பும் வகையிலும், வார்த்தைகள் அமைத்துப் பேசவேண்டும்.



சொல்லும் போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும்.



நண்பர்களைப் பிரிக்காமல் சேர்க்கும் தன்மையதாய்ப் பகைவரும் கேட்க விரும்புவதாய்ப் பேசவது சொல்லாற்றல். ( முன்பு கேட்டவர் மீண்டும் கேட்க, இதுவரை கேளாதவரும் விரும்பிக் கேட்கப் பேசுவது என்றும் கூறலாம்).



கேட்போரைக் கவரும் தன்மையுடைதாகவும், கேட்காதவரும் தேடிவந்து விரும்பிக் கேட்கக் கூடியதாகவும் அமைவதே சொல்வன்மை எனப்படும்.


'Tis speech that spell-bound holds the listening ear,
While those who have not heard desire to hear.


The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).



kaettaarp piNikkum thakaiyavaaik kaeLaarum
vaetpa mozhivadhaam sol


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நலம் அடைந்தவர் என்றால் சொல் வளம் பெற்றவர். சொல் வெல்லவும் விழ்த்தவும் செய்யும் என்பதால் திறனறிந்த சொல்ல வேண்டும். பல சொல்ல விரும்பாமல் மறுக்க முடியாதபடி சொல்லை சொல்ல வேண்டும். நல்வாசம் வீசும் செடியில் பூத்தும் வாசம் தராத மலர் பொன்றவர் தான் அறிந்ததை அடுத்தவர் உணரச் செய்யாதவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.