திருவள்ளுவரின் திருக்குறள்

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.



துன்பத்திற்கு துன்பம் தருவர் துன்பத்திற்கு துன்பப்படாதவர்.



துன்பம் வந்த போது அதற்க்காக வருந்திக் கலங்காதவர் அந்தத் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவார்.



வரும் துன்பத்திற்குத் துன்பப்படாத மன ஊக்கம் உள்ளவர். துன்பத்திற்குத் துன்பம் தருவர்.



துன்பம் சூழும் போது, துவண்டு போகாதவர்கள் அந்தத் துன்பத்தையே துன்பத்தில் ஆழ்த்தி அதனைத் தோல்வியுறச் செய்வார்கள்.


Who griefs confront with meek, ungrieving heart,
From them griefs, put to grief, depart.


They give sorrow to sorrow, who in sorrow do not suffer sorrow.



idumpaikku idumpai paduppar idumpaikku
idumpai padaaa thavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இடர் கண்டு அழியாமல் இருக்க நகைப்புன் அதைப்பார்த்து உள்ளத்தின் திறத்தை வளர்த்து இடர்பாட்டிற்கே இடர்பாடு தரவேண்டும். இடர்பாடுகள் நம்மை வளர்க்கும் அற்புத சுழல் என உணர்ந்தவர் இன்பத்தில் நிலைக்கிறார். இன்பம் கருதி செயல்படமால் இடர்பாடுகளும் இன்பத்திற்கே என்பதே சிறப்பு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.