திருவள்ளுவரின் திருக்குறள்

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்.



வெள்ளத்தில் முழ்கும் அளவு வரும் தொல்லைகள், அறிவு உடையவர்களின் மனதின் எண்ணத்தினாலேயே அழிந்துவிடும்.



வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.



வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.



வெள்ளம்போல் துன்பம் வந்தாலும் அதனை வெல்லும் வழி யாது என்பதை அறிவுடையவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே அத்துன்பம் விலகி ஓடி விடும்.


Though sorrow, like a flood, comes rolling on,
When wise men's mind regards it,- it is gone.


A flood of troubles will be overcome by the (courageous) thought which the minds of the wise will entertain, even in sorrow.



veLLath thanaiya idumpai aRivutaiyaan
uLLaththin uLLak kedum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இடர் கண்டு அழியாமல் இருக்க நகைப்புன் அதைப்பார்த்து உள்ளத்தின் திறத்தை வளர்த்து இடர்பாட்டிற்கே இடர்பாடு தரவேண்டும். இடர்பாடுகள் நம்மை வளர்க்கும் அற்புத சுழல் என உணர்ந்தவர் இன்பத்தில் நிலைக்கிறார். இன்பம் கருதி செயல்படமால் இடர்பாடுகளும் இன்பத்திற்கே என்பதே சிறப்பு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.