திருவள்ளுவரின் திருக்குறள்

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.



அரியது என்று செயல்பட அச்சம் அடைவது கூடாது. முயற்சி செய்வதே பெருமையானது.



இது செய்வதற்கு அருமையாகாது என்று சோர்வுறாமல் இருக்க வேண்டும், அதைச் செய்வதற்க்குத் தக்க பெருமையை முயற்சி உண்டாக்கும்.



நம்மால் இதைச் செய்யமுடியாது என்று மனம் தளரக்கூடாது. அதைச் செய்து முடிக்கும் ஆற்றலை முயற்சி தரும்.



நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.


Say not, 'Tis hard', in weak, desponding hour,
For strenuous effort gives prevailing power.


Yield not to the feebleness which says, "this is too difficult to be done"; labour will give the greatness (of mind) which is necessary (to do it).



arumai udaiththendru asaavaamai vaeNdum
perumai muyaRchi tharum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

செயல்பட ஆர்வமாக இருப்பதே எல்லா வெற்றிக்கும் ஆதாரம். எனவே முழுமை அடையும் வரை செயல்பட துணிய வேண்டும். ஐம்பொறியில் சில இல்லாது போனாலும் பழியாகாது ஆள்வினை இல்லாது இருப்பதே பழி. வாழ்வாங்கு வாழ்பவரை கடந்து வாழ உடல் வருத்த உழைத்தால் முடியும். தலைவிதியையும் மாற்றும் வல்லதை உழைப்பிற்கு உண்டு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.