திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஊக்கமுடைமை / Energy

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று.



உலக நன்மைகளை பெற்றவர் எனப்படுவது உச்சாகமுடன் ஆர்வமாய் செயல்படுவது. அப்படி இல்லை என்றால் உள்ளதும் உள்ளபடி இல்லாமல் மாறும்.



ஒருவர் பெற்றிருக்கின்றார் என்று சொல்லத்தக்க சிறப்புடையது ஊக்கமாகும், ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் அதை உடையவர் ஆவரோ.



ஊக்கம் உடையவரே எல்லாவற்றையும் உடையவர்; ஊக்கம் இல்லாதவர் வேறு எதை உடையவர் என்றாலும் உடையவர் ஆவாரே?.



ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.


'Tis energy gives men o'er that they own a true control;
They nothing own who own not energy of soul.


Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?.



udaiyar enappatuvadhu ookkam aqdhillaar
udaiyadhu udaiyaroa matru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உரிமையாக அடையவேண்டிய உடைமைப் பொருள் ஊக்கம், அது இல்லை என்றால் அடைந்த எல்லாம் மாறும். ஊக்கம் உள்ளவர்கள் தோல்வி கடந்து வெற்ற அடைவார். ஊக்கமே வாழ்வின் நிலைப்பாட்டை தீர்மாணிக்கும். தந்தம் உள்ள யானையை எதிர்க்கும் புலி ஊக்கத்திற்கு நல்ல உவமை. ஊக்கம் இல்லாதவர் இயந்திர மனிதனே.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.