திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கண்ணோட்டம் / Benignity

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர்.



மண்ணே மரத்தை வளர்க்கும் அழிக்கவும் செய்கிறது, மரத்தின் தன்மைக்கு ஏற்ப மண் செயல்படுவதைப் போன்றே கண்ணும் கண்ணோடு பார்த்தறிதல்(பக்குவமடைதல்) இல்லாதவர்.



கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.



கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.



ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.


Whose eyes 'neath brow infixed diffuse no ray
Of grace; like tree in earth infixed are they.


He They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).



maNNoa tiyaindha maraththanaiyar kaNNoa
tiyaindhukaN Noataa thavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பார்த்து அறியும் திறத்தால் உண்மை நிலைக்கிறது. அவர்களால் உலகம் வளம் அடைகிறது. அத்திறன் இல்லாதவர்கள் உலகின் பாராமானவர்கள், பாடலுக்கு இசை போன்றது கண்ணுக்கு பார்த்தறிதல், காரியங்கள் சிதையாமல் உள்ளபடி பாரப்பவர் வல்லமையானவர்கள் அவர்கள் நஞ்சையும் நன்மை பொருட்டு அருந்த தயங்கமாட்டர்கள்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.