திருவள்ளுவரின் திருக்குறள்

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து.



அரிதாக கேட்டு இனிமை அற்று பார்பவன் அடைந்த அதிகபட்ச செல்வம் ஏதும் செய்யமுடியாத பேய் கண்ட காட்சி போன்றது.



எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.



தன்னைக் காண வருவார்க்கு நேரம் தருவதில் இழுத்தடிப்பும், கண்டால் முகக்கடுப்பும் உடையவரின் பெருஞ்செல்வம், பூதத்தால் கைக்கொள்ளப்பட்டது போன்றதாம்.



யாரும் எளிதில் காண முடியாதவனாகவும், கடுகடுத்த முகத்துடனும் இருப்பவனிடம் குவிந்துள்ள பெரும் செல்வம் பேய்த் தோற்றம் எனப்படும் அஞ்சத்தகும் தோற்றமேயாகும்.


Whom subjects scarce may see, of harsh forbidding countenance;
His ample wealth shall waste, blasted by demon's glance.


The great wealth of him who is difficult of access and possesses a sternness of countenance, is like that which has been obtained by a devil.



arunjevvi innaa mukaththaan perunjelvam
paeeykaN dannadhu udaiththu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

வெறுப்புடன் நோக்காமல் தகுந்த ஆதாரத்தை அறிந்து தீர்ப்பு கூறுவது ஆட்சியர் கடமை. மேலும் வெறுப்புடன் தீய சொற்களை பயன்படுத்துவதும் மனிதபிமானமற்ற செயல் செய்வதும் தீர துன்பத்தையும் நிலத்திற்கு ஆறாத பழியும் உண்டாக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.