திருவள்ளுவரின் திருக்குறள்

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின்.



துன்பத்திலும் துன்பமானது நல் ஆணைகள் கொண்டு ஆளாத ஆட்சியாரின் கிழ் உடைமைக் (குடியுரிமை)கொண்டு இருப்பது.



முறை செய்யாத அரசனுடைய கொடுங்கோல் ஆட்சியின் கீழ் இருக்கப் பெற்றால், பொருள் இல்லாத வறுமை நிலையைவிடச் செல்வநிலை துன்பமானதாகும்.



தவறாக ஆள்பவரின் ஆட்சிக்குக் கீழ் ஏழையாய் வாழ்வதைக் காட்டிலும் பணக்காரனாய் வாழ்வது துன்பம்.



வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.


To poverty it adds a sharper sting,
To live beneath the sway of unjust king.


Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.



inmaiyin innaadhu udaimai muRaiseyyaa
mannavan koaRkeezhp patin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கொலை பாதகரை விட கொடுமையானவர் கொடிய ஆட்சியர். துன்பத்தை விட துன்பமும் அவரே தருவார். அர்த்தமற்ற ஆணைகள் குடி மக்களை இழுக்கச் செய்யும். ஆக்கப் பூர்வமான செயல்கள் குறையும்படி செய்பவர்கள் நல்லாட்சி தருபவர்கள் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.