திருவள்ளுவரின் திருக்குறள்

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.



துன்பத்தை தாங்காமல் அழும் கண்ணீர், இருக்கும் செல்வத்தை அழிக்கும் படை போன்றது.



(முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்க வல்ல படை அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ.



தவறான ஆட்சியால் துன்பப்பட்டு, துன்பம் பொறுக்காத குடிமக்கள் சிந்திய கண்ணீர்தான், ஆட்சியாளரின் செல்வத்தை அழிக்கும் ஆயுதம்.



கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.


His people's tears of sorrow past endurance, are not they
Sharp instruments to wear the monarch's wealth away?.


Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?.



allaRpattu aatraadhu azhudhakaN Neerandrae
selvaththaith thaeykkum padai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கொலை பாதகரை விட கொடுமையானவர் கொடிய ஆட்சியர். துன்பத்தை விட துன்பமும் அவரே தருவார். அர்த்தமற்ற ஆணைகள் குடி மக்களை இழுக்கச் செய்யும். ஆக்கப் பூர்வமான செயல்கள் குறையும்படி செய்பவர்கள் நல்லாட்சி தருபவர்கள் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.