திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: செங்கோன்மை / The Right Sceptre

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.



இயல்புகளை அறிந்து ஆணை பிறப்பிக்கும் ஆட்சியாளர் காலத்தில் மழையும் நல்ல செயல்களும் கூடி வரும்.



நீதி முறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ மழையும் நிறைந்த விளைவும் ஒருசேர ஏற்படுவனவாகும்.



அரச நீதிநூல்கள் கூறியபடி, நேர்மையாக ஆளும் ஆட்சியாளரிடம் பருவமழையும், குறையாத விளைச்சலும் சேர்ந்தே இருக்கும்.



நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.


Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields.


Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.



iyalpuLik koaloachchum mannavan nhaatta
peyalum viLaiyuLum thokku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உடன்படுகிறதா என்று பாராமல் இயற்கையை புரிந்துக் கொண்டு யாவரும் சிறக்க வழிமுறை செய்வதே நல்லாட்சிமுறை இப்படி செய்பவர் வான்நோக்கிய வளத்தை தன் குடிமக்களுக்கு வழுங்குவார். ஆட்சியாளர்களின் சட்டமே இறுதியாக இருப்பதால் ராணுவ பலத்தை விட நற்குணமே பலமாக அமையும். கொடியவர்களை அழிந்தல் களை எடுப்பதைப் போன்றது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.