திருவள்ளுவரின் திருக்குறள்

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.



உரிமைக் கொண்டாட ஒன்றும் இல்லாத பொழுதும் உறவுப் பாராட்டுவது சுற்றத்தாரிடத்தில் உண்டு.



ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.



ஒருவன் பிடிமானம் ஏதும் இல்லாமல் எல்லாம் இழந்த நிலையில் இருந்தபோதும், அவனுடன் தங்களுக்கு உள்ள பழந்தொடர்பைக் கூறுவது சுற்றத்தாரிடம் மட்டுமே உண்டு.



ஒருவருக்கு வறுமை வந்த நேரத்திலும் அவரிடம் பழைய உறவைப் பாராட்டும் பண்பு உடையவர்களே சுற்றத்தார் ஆவார்கள்.


When wealth is fled, old kindness still to show,
Is kindly grace that only kinsmen know.


Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).



patratra kaNNum pazhaimaipaa raattudhal
sutraththaar kaNNae uLa


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

இல்லாமையிலும் உறவு பாராட்டுவது உற்றார்களின் பண்பு. விருப்பம் குறையாத உறவு ஒரு சிறப்பானது. உறவு இல்லாத வாழ்வு கரையற்ற குளம் போன்றது. காகம் போல் கூடி உண்ணுதல் உறவுக்கு பெருமை. உறவு பிரிந்தாலும் மீண்டும் கூடும் வாய்ப்பு வரும். பிரிந்த உறவை இணையும் தருணத்தில் அவசியம் இணைத்துக் கொள்ள வேண்டும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.