திருவள்ளுவரின் திருக்குறள்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.



நல்லதும் கேட்டதும் தேடி விரும்பிச் செய்யும் தன்மையால் நம்மை ஆளும்.



நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு உரியவனாக) ஆளப்படுவான்.



ஒரு செயலை நம்மிடம் செய்யக் கொடுத்தால் அச்செயலின் நன்மை தீமை இரண்டையும் ஆராய்ந்து எது நன்மையோ அதையே செய்ய வேண்டும்.



நன்மை எது தீமை எது என ஆராய்ந்து அறிந்த, நற்செயலில் மட்டுமே நாட்டங் கொண்டவர்கள் எப்பணியினை ஆற்றிடவும் தகுதி பெற்றவராவார்கள்.


Who good and evil scanning, ever makes the good his joy;
Such man of virtuous mood should king employ.


He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.



nanmaiyum theemaiyum naati nalampurindha
thanmaiyaan aaLap padum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நாடும் தன்மைக்கு ஏற்ப நன்மை தீமை உண்டாகும். சேர்த்து வாரி அதிகரிக்க தெரிந்தவர் செய்வதே செயல். அன்பு, அறிவு, புரிதல், அவாயின்மை என நான்கும் உள்ளவரே தெளிவானவர். செயல்பட வாய்ப்பு இருந்தும் செயல்பட முடியாதவர்கள் பலர். செயல்பட தகுதியானவரை நாடி தகுந்த காலத்தில் செய்வதே சரி. தகுதியற்றவரை தேர்தெடுப்பதால் மரியாதை குறையும். தகுதியானவரை மதிப்புடன் நடத்துவதே ஆட்சியாளர்களின் கடமை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.