திருவள்ளுவரின் திருக்குறள்

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.



ஆராயாமல் யாரையும் தேர்ச்சிப் பெற்றவராக ஏற்கக் கூடாது. தேர்ந்தெடுத்தப் பின்பு தேர்ச்சிப் பெரும் பொருள்களைக் கேட்டு தெளிய வேண்டும்.



யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும்.



எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.



நன்கு ஆராய்ந்து தெளிந்த பிறகு ஒருவரிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆராய்ந்து பாராமல் யாரையும் நம்பிவிடக் கூடாது.


Trust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide.


Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.



theRaRka yaaraiyum thaeraadhu thaerndhapin
thaeRuka thaeRum poruL


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

அகம் சார்ந்த அறமும், புறம் சார்ந்த பொருளும், நிலையான இன்பமும். உயரின் தன்மையும் அச்சமும் என நானகையும் தெரிந்து தேறுவதையே தெளிவு எனலாம். நல்ல சுழலில் பிறந்தாலும் குற்றம் அற்றவனாக வாழ்வதே தெளிவு. அரியன கற்பதைக் காட்டிலும் தன் குற்றத்தை நீக்குவதை தெளிவு. குணம் குற்றம் சீர்தூக்கிப் பார்த்து மிகையானதை எடுத்துக் கொள்ள வேண்டும். தேராதவரின் பின் சென்றால் தாராத துன்பம் விளையும். தேறியவரின் ஐயமும் தேராதவரின் தெளிவும் தீராத துன்பம் தரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.