திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: இல்வாழ்க்கை / Domestic Life

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.



உலகத்தில் வாழும் முறையுடன் வாழ்பவன் வான்போன்ற தெய்வமாக மதிக்கப்படுவான்.



உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.



மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.



தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.


Who shares domestic life, by household virtues graced,
Shall, mid the Gods, in heaven who dwell, be placed


He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven



vaiyaththuL vaazhvaangu vaazhpavan vaanuRaiyum
theyvaththuL vaikkap padum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உள்ளபடி இருத்தல் என்ற தன்மையே இல்வாழ்வு. இதன் பெருட்டு அடையும் நன்மைகள் அதிகம். துறவு மெற்கொண்டவர், வாழ்பவர், இறந்தவர் என்ற மூவருக்கும் உதவும் ஆற்றலும், விருந்தேம்பலும், பழிக்கு அஞ்சுவதும் இல் வாழ்வின் சிறப்பு கூறுகள். எனவே, அன்புடனும், அறனுடனும் நடப்பதே பண்பும், பயனுள்ளதும் ஆகும். குடுப்பத்திலிந்து கற்க முடியதவர் துறப்பதால் எதையும் கற்க முடியாது. இல்வாழ்வு போன்ற சிறந்த நோன்பு இல்லை. பிறர் பழிக்காதபடி வாழ்வாங்கு வாழ்ந்தால் தெய்வமாகலாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.