திருவள்ளுவரின் திருக்குறள்

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.



நல்ல இனத்தை விட துணையாவது வேறு இல்லை, தீய இனத்தை விட துன்பம் தருவதும் இல்லை.



நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.



ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.



நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாக இருப்பதும், தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தரக்கூடியதும் எதுவுமே இல்லை.


Than good companionship no surer help we know;
Than bad companionship nought causes direr woe.


There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.



nallinaththi noongunh thuNaiyillai theeyinaththin
allaR patuppadhooum il


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

மானிட பதர்களான சிறிய இனத்துடன் அதே இனம் மட்டுமே உறவு பாராட்டும். இருப்பிடத்தின் குணங்கள் நம்மை பற்றிவிடும் என்பதால் அறிவற்றதை அறிவாக காட்டும் என்பதை உணர்ந்து மனதை தூய்மை செய்யவேண்டும். மனத்தூய்மை உள்ள சான்றோர் இனப்பற்றுக் கொள்வதில்லை. மனத்தூய்மை உண்டானால் மறு பிறப்பும் நன்றாக அமையும் தீமையும் அண்டாது.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.