திருவள்ளுவரின் திருக்குறள்

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.



செய்யவேண்டுயதைச் செய்யத் தவறியவன் செல்வம் உயர்வு பல அடையாமல் கெடும்.



செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.



செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.



நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்.


Who leaves undone what should be done, with niggard mind,
His wealth shall perish, leaving not a wrack behind.


The wealth of the avaricious man, who does not expend it for the purposes for which he ought to expend it will waste away and not continue.



seyaRpaala seyyaa thivaRiyaan selvam
uyaRpaala thandrik kedum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நான் என்ற செருக்கும், சினமும், தாழ்வு மனப்பாண்மையும் இல்லாதவரின் வளர்ச்சி ஆணவம் இல்லாமல் இருக்கும். ஆசை, மதிக்காத மனக்கேட்ட செயல், உண்மையற்ற மகிழ்ச்சி உயர்வை தடுக்கும். சிறிய தவறையும் பெரிதாக பார்க்க வேண்டும். தன்னைத் தானே வியத்தல் குற்றமாகும். அறியாமையை அழிக்க காதல் கொண்டால் ஏதும் அற்ற நூலை தேவையற்றது என மாற்றிவிடலாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.