திருவள்ளுவரின் திருக்குறள்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.



தன்னிடம் உள்ள குறைகளை அழித்துப் பிறரது குறையை காணும் வழிகாட்டுபவருக்கு எந்த குறையும் இருக்காது.



முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.



படிக்காதவர் முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!.



முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?.


Faultless the king who first his own faults cures, and then
Permits himself to scan faults of other men.


What fault will remain in the king who has put away his own evils, and looks after the evils of others.



than-kutram neekkip piRarkutranG kaaNkiRpin
en-kutra maakum iRaikku


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நான் என்ற செருக்கும், சினமும், தாழ்வு மனப்பாண்மையும் இல்லாதவரின் வளர்ச்சி ஆணவம் இல்லாமல் இருக்கும். ஆசை, மதிக்காத மனக்கேட்ட செயல், உண்மையற்ற மகிழ்ச்சி உயர்வை தடுக்கும். சிறிய தவறையும் பெரிதாக பார்க்க வேண்டும். தன்னைத் தானே வியத்தல் குற்றமாகும். அறியாமையை அழிக்க காதல் கொண்டால் ஏதும் அற்ற நூலை தேவையற்றது என மாற்றிவிடலாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.