திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கல்வி / Learning

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.



கண் உள்ளவர்கள் என்றால் கற்றவர்கள் முகத்தில் புண் உள்ளவர்கள் கல்லாதவர்கள்



கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.



கற்றவரே கண் உடையவர்; கல்லாதவரோ முகத்தில் இரண்டு புண்ணையே உடையவர்.



கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.


Men who learning gain have eyes, men say;
Blockheads' faces pairs of sores display.


The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.



kaNNutaiyar enpavar katroar mukaththirandu
puNNutaiyar kallaa thavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

கல்வி கசடு என்ற கருத்து பேதத்தை உருவாக்கும் என்பதால் கசடற கற்பது அவசியம். எண்ணும் எழுத்துமான கல்வியே உலகை உணர்த்தும் கண்கள். கற்காமல் யாரும் இருக்க முடியாது கல்வியின் பொருட்டு இன்பம் அடைந்தவர் அடுத்தவரும் இதை அடைய ஆசைபாடுவார். கேடு விளைவிக்காத கல்வியே சிறந்த செல்வமாகும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.