திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: ஊழ் / Fate

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.



பாதுகப்பினும் முடியாது தம்பால் உரிமையற்றது முயன்று விளக்கினும் விலகாது தமக்குரியது.



ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் பொருள்கள் வருந்திக்காப்பாற்றினாலும் நில்லாமல் போகும் தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகா.



எத்தனை காத்தாலும் நமக்கு விதி இல்லை என்றால், செல்வம் நம்மிடம் தங்காது. வேண்டா என்று நாமே வெளியே தள்ளினாலும் விதி இருந்தால் செல்வம் நம்மை விட்டுப் போகமாட்டாது.



தனக்கு உரிமையல்லாதவற்றை எவ்வளவுதான் பாதுகாப்பாக வைத்தாலும் அவை தங்காமல் போய்விடக் கூடும்; உரிமையுள்ளவற்றை எங்கே கொண்டு போய்ப் போட்டாலும் அவை எங்கும் போகமாட்டா.


Things not your own will yield no good, howe'er you guard with pain;
Your own, howe'er you scatter them abroad, will yours remain.


Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.



pariyinum aakaavaam paalalla uyththuch
soriyinum pogaa thama


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பிறவிப் பயன் பொருத்தே ஆர்வமும் சோர்வும் தோன்றுகிறது. அறிவு சார்ந்த நூல்கள் கற்றாலும் தன் பிறவி அறிவே மேலோங்கி இருக்கிறது. தவறு சரியாகவும் சரி தவறாகவும் பிறவிப்பயனால் மாறுகிறது. இரு வேறு உலகம் இருக்கிறது திருவுடையவன் தெளிந்தவன் என உயர்வைதருகிறது. விதி என்ற பிறவிப் பயன் மட்டுமே மற்றவே முடியாத நிலையில் இருக்கும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.