திருவள்ளுவரின் திருக்குறள்

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்.



ஆசையின் செயல்களை ஆழமாக தொலைத்தால் தர்மத்திற்கு மாறாத செயல்கள் தன் தேவைக்கு ஏற்ப வரும்.



ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.



ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.



கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்.


Who thoroughly rids his life of passion-prompted deed,
Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed.


If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them.



avaavinai aatra aRuppin thavaavinai
thaanvaendu maatraan varum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பிறப்பை தருவது ஆசை. தேவை என்று வேண்டுதல் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் பிறவாத நிலை மட்டுமே மற்றவை தானாகவே வரும். ஆசை அற்ற நிலையே தூய்மையானது. இதுவே இன்பத்தின் பிறப்பிடம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.