திருவள்ளுவரின் திருக்குறள்

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.



தூய்மை என்பது ஆசை இல்லாது இருத்தல் மற்றவை வாய்மையை விரும்புவதால் வரும்.



தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.



மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.



தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும். அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்.


Desire's decease as purity men know;
That, too, from yearning search for truth will grow.


Purity (of mind) consists in freedom from desire; and that (freedom from desire) is the fruit of the love of truth.



thoouymai enpadhu avaavinmai matradhu
vaaimai vaeNta varum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பிறப்பை தருவது ஆசை. தேவை என்று வேண்டுதல் செய்ய வேண்டும் என்றால் மீண்டும் பிறவாத நிலை மட்டுமே மற்றவை தானாகவே வரும். ஆசை அற்ற நிலையே தூய்மையானது. இதுவே இன்பத்தின் பிறப்பிடம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.