திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: துறவு / Renunciation

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.



தீர்க்கமாக ஆராய்ந்து தலைபட்டவரே துறந்தவர்,மற்றவர்கள் பயன் கருதி மயக்கத்தால் வலைபட்டவர்கள்.



முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.



ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.



அரைகுறையாக இல்லாமல் அனைத்தும் துறந்தவர்களே உயர்ந்த நிலையை அடைவார்கள். அவ்வாறு துறவாதவர்கள் அறியாமையென்னும் வலையில் சிக்கியவர்களாவார்கள்.


Who thoroughly 'renounce' on highest height are set;
The rest bewildered, lie entangled in the net.


Those who have entirely renounced (all things and all desire) have obtained (absorption into God); all others wander in confusion, entangled in the net of (many) births.



thalaippattaar theerath thuRandhaar mayangi
valaippattaar matrai yavar


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

எது எது என்று அறிந்து விலகியவர் அதனிடமிருந்து துன்பம் அடைவதே இல்லை. தேவைகள் சரியாக நடக்க துறவு அவசியம் துறவால் நன்மைகள் பலபல உண்டு. பார்வையிலேயே பற்று இல்லாமல் இருக்க வேண்டும் அப்படி இல்லாதவர் பற்று உள்ளவரே. பற்று இல்லாதவரைப் பற்றினால் பற்றை விடலாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.