திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: துறவு / Renunciation

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.



வெற்றிக் கொள்ளவேண்டும் புலன்கள் ஐந்தையும், விட்டொழிக்க வேண்டும் தேவையானவை ஒன்றாக கிடைக்க.



ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும்.



ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.



ஐம் புலன்களையும் அடக்கி வெல்வதும், அப்புலன்கள் விரும்புகின்றவற்றை யெல்லாம் விட்டுவிடுவதும் துறவுக்கு இலக்கணமாகும்.


'Perceptions of the five' must all expire;-
Relinquished in its order each desire.


Let the five senses be destroyed; and at the same time, let everything be abandoned that (the ascetic) has (formerly) desired.



atalvaendum aindhan pulaththai vitalvaeNdum
vaeNtiya vellaam orungu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

எது எது என்று அறிந்து விலகியவர் அதனிடமிருந்து துன்பம் அடைவதே இல்லை. தேவைகள் சரியாக நடக்க துறவு அவசியம் துறவால் நன்மைகள் பலபல உண்டு. பார்வையிலேயே பற்று இல்லாமல் இருக்க வேண்டும் அப்படி இல்லாதவர் பற்று உள்ளவரே. பற்று இல்லாதவரைப் பற்றினால் பற்றை விடலாம்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.