திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நிலையாமை / Instability

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.



நாக்கு விக்குளால் அடைபடுவதற்கு முன் (மரணத்திற்கு முன்) நல்ல செயல்களை விரும்பி செய்திடல் வேண்டும்.



நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்கு முன்) நல்ல அறச்செயலை விரைந்து செய்யத்தக்கதாகும்.



நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.



வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து நம் உயிர் இருக்கும் போதே உயர்ந்த நற்பணிகளை ஆற்றிட முனைய வேண்டும்.


Before the tongue lie powerless, 'mid the gasp of gurgling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.


Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.



naachchetru vikkuLmael vaaraamun nalvinai
maeRsendru seyyap padum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நிலையற்றதை நிலை என்று நினைக்கும் அறிவுள்ள யாரும் கிழானவர்களே. சிறுக சேர்ந்த கூட்டம் உடனே வெளியேறும் கூத்டாட்டு மைதானத்தின் நிகழ்கவே செல்வத்தின் நிலை. உலகின் சிறப்பே நேற்று இருந்தவர் இன்று இல்லை என்பதாகும். எனது என்ற பற்று அறுத்தவனே எல்லாம் உடையவன். மரணமும் நிலையின்றி தூக்கம் போல் நித்தம் நிகழ்கிறது. ஏதார்த்த சூழலை உணர்ந்தவரே பிறப்பை முடித்துக் கொள்கிறார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.