திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: நிலையாமை / Instability

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.



ஒரு நாள் என்று காட்டப்படுவது உயிர் என்ற மரத்தை அறுக்கும் வாள் என்று உணர்வுள்ளவர்கள் அறிவார்கள்.



வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால் நாள் என்பது ஒரு கால அளவுகோல்காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.



நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.



வாழ்க்கையைப் பற்றி உணர்ந்தவர்கள், நாள் என்பது ஒருவரின் ஆயுளை அறுத்துக் குறைத்துக் கொண்டேயிருக்கும் வாள் என்று அறிவார்கள்.


As 'day' it vaunts itself; well understood, 'tis knife',
That daily cuts away a portion from thy life.


Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.



naaLena ondrupoaR kaatti uyireerum
vaaLadhu uNarvaarp peRin


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

நிலையற்றதை நிலை என்று நினைக்கும் அறிவுள்ள யாரும் கிழானவர்களே. சிறுக சேர்ந்த கூட்டம் உடனே வெளியேறும் கூத்டாட்டு மைதானத்தின் நிகழ்கவே செல்வத்தின் நிலை. உலகின் சிறப்பே நேற்று இருந்தவர் இன்று இல்லை என்பதாகும். எனது என்ற பற்று அறுத்தவனே எல்லாம் உடையவன். மரணமும் நிலையின்றி தூக்கம் போல் நித்தம் நிகழ்கிறது. ஏதார்த்த சூழலை உணர்ந்தவரே பிறப்பை முடித்துக் கொள்கிறார்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.