திருவள்ளுவரின் திருக்குறள்

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை.



அறிவினால் சாதிப்பது உண்டா? அடுத்ததின் துன்பத்தை தனது துன்பம் போல் கருதுவதை விட.



மற்ற உயிரின் துன்பத்தை தன் துன்பம் போல் கருதிக் காப்பாற்றா விட்டால் பெற்றுள்ள அறிவினால் ஆகும் பயன் உண்டோ.



அடுத்த உயிர்க்கு வரும் துன்பத்தைத் தமக்கு வந்ததாக எண்ணாவிட்டால், அறிவைப் பெற்றதால் ஆகும் பயன்தான் என்ன?.



பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்ற முனையாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை.


From wisdom's vaunted lore what doth the learner gain,
If as his own he guard not others' souls from pain?.


What benefit has he derived from his knowledge, who does not endeavour to keep off pain from another as much as from himself ?.



aRivinaan aakuva thuNdoa piRidhinnhoai
thanhnhoaipoal poatraak kadai


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சிறப்பு தரும் பொருள் இருப்பினும் அடுத்தவருக்கு துன்பம் தராதவரே குற்றமற்றவர். துன்பம் தந்தவரையும் தண்டிக்காதவர் தூய்மையானவர். துன்பம் தந்தவருக்கும் நன்மை செய்வதே நல்லது அதுவே தண்டிக்கும் வழி. பிறருக்கு நோய் என்ற தீங்கு செய்வதே தனக்குத் தனே செய்வது எனவே, நாம் முற்பகல் செய்யும் தீங்கு பிற்பகல் வந்து சேரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.