திருவள்ளுவரின் திருக்குறள்

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.



துன்பம் தந்தவரை தண்டித்தல் என்பது அவர் வெட்கப்படும்படி நல்லது செய்து விடுவதே.



இன்னா செய்தவரைத் தண்டித்தல் அவரே நாணும் படியாக அவருக்கு நல்லுதவி செய்து அவருடைய தீமையையும் நன்மையையும் மறந்து விடுதலாகும்.



நமக்குத் தீமை செய்தவரைத் தண்டிக்கும் வழி, அவர் வெட்கப்படும்படி அவருக்கு நன்மையைச் செய்து அவர் செய்த தீமையையும், நாம் செய்த நன்மையையும் மறந்துவிடுவதே.



நமக்குத் தீங்கு செய்தவரைத் தண்டிப்பதற்குச் சரியான வழி, அவர் வெட்கித் தலைகுனியும்படியாக அவருக்கு நன்மை செய்வதுதான்.


To punish wrong, with kindly benefits the doers ply;
Thus shame their souls; but pass the ill unheeded by.


The (proper) punishment to those who have done evil (to you), is to put them to shame by showing them kindness, in return and to forget both the evil and the good done on both sides.



innaasey thaarai oRuththal avarnhaaNa
nannayanhj seydhu vidal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சிறப்பு தரும் பொருள் இருப்பினும் அடுத்தவருக்கு துன்பம் தராதவரே குற்றமற்றவர். துன்பம் தந்தவரையும் தண்டிக்காதவர் தூய்மையானவர். துன்பம் தந்தவருக்கும் நன்மை செய்வதே நல்லது அதுவே தண்டிக்கும் வழி. பிறருக்கு நோய் என்ற தீங்கு செய்வதே தனக்குத் தனே செய்வது எனவே, நாம் முற்பகல் செய்யும் தீங்கு பிற்பகல் வந்து சேரும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.