திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வெகுளாமை / Restraining Anger

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.



செல்லத்தகாத இடத்தில் சினம் தீமையானது செல்லத் தகுந்த இடத்திலும் அதைவிட தீமையானது இல்லை.



பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.



பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.



வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.


Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.


Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.



sellaa idaththuch sinandheedhu sellitaththum
iladhanin theeya piRa


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

சினம் செல்லுபடி ஆகாத இடத்தில் காப்பது பயன் அற்றது. சினம் தீமை பயப்பதால் அதை மறத்தல் வேண்டும். மகிழ்வையும் கொண்டாட்டத்தையும் அழிக்கும் பகைவனாக சினம் இருக்கிறது. தனக்கும் தன் இனத்திற்கும் எதிரியாக இருக்கும் சினத்தை தவிர்போம். உள்ளதை அடையும் ஆற்றலை இழக்கச் செய்யும் சினம். சினத்தை துறந்தவர் துறவிக்கும் மேலானவர்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.