திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வாய்மை / Veracity

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.



வெளிச்சுத்தம் தண்ணீரால் ஏற்படும் உள்ளே உள்ள உள்ளத்தின் சுத்தம் வாய்மையால் அறியப்படும்.



புறத்தே தூய்மையாக விளங்குதல் நீரினால் ஏற்ப்படும், அதுபோல அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும்.



உடம்பு தண்ணீரால் சுத்தமாகும்; உள்ளம் உண்மையால் சுத்தமாகும்.



நீரில் குளிப்பதால் உடலின் அழுக்கு மட்டுமே நீங்கும்; மனம் அழுக்குப்படாமல் தூய்மையுடன் விளங்கிட, சொல்லிலும் செயலிலும் வாய்மை வேண்டும்.


Outward purity the water will bestow;
Inward purity from truth alone will flow.


Purity of body is produced by water and purity of mind by truthfulness.



puRaLthooimai neeraan amaiyum aganthooimai
vaaimaiyaal kaaNap padum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உண்மை என்பது அடுத்தவருக்கு துன்பம் தராமல் இருப்பது. பொய்யும் உண்மை போன்றது நன்மை தரும் சமயத்தில். தனக்குத் தானே உண்மையாக இல்லாவிடின் நமக்கு நாமே எதிரியாக இருப்போம். மனதளவிலேயே பொய்யற்றவர் மக்கள் மனதில் நிலைப்பார் இதுவே தானம் தவம் கடந்த மேலானது. நீரில் குளிப்பது புற உடலை தூய்மைச் செய்யும் என்றால் உண்மையுடன் இருப்பது அகத்தூய்மைச் செய்யும். வெளிச்சம் போன்ற தீர்க்கமான முடிவை பெற நினைக்கும் சான்றோர் பொய்யாமையை போற்ற வேண்டும். உண்மையை விட சிறந்தது உலகில் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.