திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: வாய்மை / Veracity

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.



வாய்மை என்பது எது என்றால் எந்த ஒரு வகையிலும் தவறு இல்லாமல் சொல்வது.



வாய்மை என்று கூறப்படுவது எது என்றால், அது மற்றவர்க்கு ஒரு சிறிதும் தீங்கு இல்லாத சொற்களைக் சொல்லுதல் ஆகும்.



உண்மை என்று சொல்லப்படுவது எது என்றால், எவர்க்கும் எத்தகைய தீங்கையும் தராத சொற்களைச் சொல்வதே ஆகும்.



பிறருக்கு எள்முனையளவு தீமையும் ஏற்படாத ஒரு சொல்லைச் சொல்வதுதான் வாய்மை எனப்படும்.


You ask, in lips of men what 'truth' may be;
'Tis speech from every taint of evil free.


Truth is the speaking of such words as are free from the least degree of evil (to others).



vaaimai enappaduvadhu yaadhenin yaadhondrum
theemai ilaadha solal


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உண்மை என்பது அடுத்தவருக்கு துன்பம் தராமல் இருப்பது. பொய்யும் உண்மை போன்றது நன்மை தரும் சமயத்தில். தனக்குத் தானே உண்மையாக இல்லாவிடின் நமக்கு நாமே எதிரியாக இருப்போம். மனதளவிலேயே பொய்யற்றவர் மக்கள் மனதில் நிலைப்பார் இதுவே தானம் தவம் கடந்த மேலானது. நீரில் குளிப்பது புற உடலை தூய்மைச் செய்யும் என்றால் உண்மையுடன் இருப்பது அகத்தூய்மைச் செய்யும். வெளிச்சம் போன்ற தீர்க்கமான முடிவை பெற நினைக்கும் சான்றோர் பொய்யாமையை போற்ற வேண்டும். உண்மையை விட சிறந்தது உலகில் இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.