திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கள்ளாமை / The Absence of Fraud

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.



தேவைகளின் அளவை அறிந்தவர்களின் நெஞ்சம் அறத்துடன் இருப்பதைப்போலவே திருட்டுத்தனம் அறிந்த நெஞ்சில் வஞ்சனை இருக்கும்.



அளவறிந்து வாழ்கின்றவரின் நெஞ்சில் நிற்கும் அறம் போல் களவு செய்து பழகி அறிந்தவரின் நெஞ்சில் வஞ்சம் நிற்கும்.



உயிர்களை நேசிக்கும் உள்ளத்துள் அறம் நிலைத்து இருப்பது போல, அடுத்தவர் பொருளைத் திருட எண்ணுபவன் உள்ளத்துள் வஞ்சகம் இருக்கும்.



நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும்; கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.


As virtue dwells in heart that 'measured wisdom' gains;
Deceit in hearts of fraudful men established reigns.


Deceit dwells in the mind of those who are conversant with fraud, even as virtue in the minds of those who are conversant with rectitude.



aLavaRindhaar nenjath thaRampoala niRkum
kaLavaRindhaar nenjil karavu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பிறர் ஏளனம் செய்யதிருக்க வேண்டும் என்றால் அடுத்தவர் பொருளை களவாட நினைக்க கூடாது. மனதளவிலும் கள்ளத்தனம் இல்லாதவரே நிறைவாக வாழ்வார். தேவையின் அளவு அறிந்தவர் திருடுவது இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.