திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: கள்ளாமை / The Absence of Fraud

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்.



திருட்டுத்தனம் என்ற திடமான செயல் தேவைகளின் அளவை அறிந்துக் கொண்ட ஆற்றல் மிகுந்தவரிடத்தில் இல்லை.



களவு என்பதற்கு காரணமான மயங்கிய அறிவு உடையவராயிருத்தல், அளவு அறிந்து வாழ்தலாகிய ஆற்றலை விரும்பினவரிடத்தில் இல்லை.



உயிர்களை நேசிக்கும் ஆசை கொண்டவரிடம், அடுத்தவர் பொருளைத் திருடும் இருண்ட அறிவு இராது.



அளவறிந்து வாழ்க்கை நடத்துகிற ஆற்றலுடையவர்களிடம், களவாடுதல் எனும் சூதுமதி கிடையாது.


Practice of fraud's dark cunning arts they shun,
Who long for power by 'measured wisdom' won.


That black-knowledge which is called fraud, is not in those who desire that greatness which is called rectitude.



kaLavennum kaaraRi vaaNmai aLavennum
aatral purindhaarkaNda il


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

பிறர் ஏளனம் செய்யதிருக்க வேண்டும் என்றால் அடுத்தவர் பொருளை களவாட நினைக்க கூடாது. மனதளவிலும் கள்ளத்தனம் இல்லாதவரே நிறைவாக வாழ்வார். தேவையின் அளவு அறிந்தவர் திருடுவது இல்லை.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.