திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: தவம் / Penance

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.



ஒத்சிசைவு அற்றவர்களை விலக்கலும் மகிழ்வானவர்களை உருவாக்குவதும் தவம் செய்பவர் நினைத்தால் வரும்.



தீமை செய்யும் பகைவரை அடக்குதலும் நன்மை செய்யும் நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால் உண்டாகும்.



பகைவர்களை மாற்றவும், நண்பர்களைப் பெருக்கவும் எண்ணினால், தவத்தால் அதைச் செய்ய முடியும்.



மன உறுதியும் கட்டுப்பாடும் கொண்டு தவமென்னும் நோன்பு வலிமையுடையதாக அமைந்தால்தான், எண்ணிய மாத்திரத்தில் பகைவரை வீழ்த்தவும் நண்பரைக் காக்கவும் முடியும்.


Destruction to his foes, to friends increase of joy.
The 'penitent' can cause, if this his thoughts employ.


If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities.



onnaarth theRalum uvandhaarai aakkalum
eNNin thavaththaan varum


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தனது துன்பத்தை நீக்கி அடுத்தவர் துன்பத்தை ஒழிப்பதே தவம். இதை அனைவரும் சாதிப்பது இயலாது. தவம் செய்பவர்க்கு உதவ பலர் தவம் செய்வதை தவிர்கிறார்கள். தகுதியானவர்களை தக்க வைக்க தவத்தால் இயலும். தன் உயிரை தெளிவாக அறிந்தவரை மற்றய உயிர்கள் போற்றும். காலனும் தன் கடமை செய்ய அஞ்சுவான் சிலராக இருக்கும் தவம் செய்பவரை கண்டு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.