திருவள்ளுவரின் திருக்குறள்

அதிகாரம்/Chapter: தவம் / Penance

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.



தவம் செய்வது தவம் செய்ய வல்லவருக்கு மட்டுமே இயலும் மற்றவர் முயற்சிப்பது பயன் தராது.



தவக்கோலமும் தவஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண்முயற்சியாகும்.



முற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான்.



உறுதிப்பாடும், மன அடக்கமும் உடையவருக்கே தவத்தின் பெருமை வாய்க்கும். எனவே கட்டுப்பாடான ஒழுக்கம் இல்லாதவர்கள், தவத்தை மேற்கொள்வது வீண் செயலேயாகும்.


To 'penitents' sincere avails their 'penitence';
Where that is not, 'tis but a vain pretence.


Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now).



thavamum thavamutaiyaarkku aakum adhanai
aqdhilaar maeRkoL vadhu


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

தனது துன்பத்தை நீக்கி அடுத்தவர் துன்பத்தை ஒழிப்பதே தவம். இதை அனைவரும் சாதிப்பது இயலாது. தவம் செய்பவர்க்கு உதவ பலர் தவம் செய்வதை தவிர்கிறார்கள். தகுதியானவர்களை தக்க வைக்க தவத்தால் இயலும். தன் உயிரை தெளிவாக அறிந்தவரை மற்றய உயிர்கள் போற்றும். காலனும் தன் கடமை செய்ய அஞ்சுவான் சிலராக இருக்கும் தவம் செய்பவரை கண்டு.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.