திருவள்ளுவரின் திருக்குறள்

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று.



நெய் உற்றி ஆயிரம் வேள்வி செய்வதிலும் ஒன்றின் உயிரை அழித்து உண்ணாமை நல்லது.



நெய் முதலியப் பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது.



(மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய) அவிகளைத் தீயில் போட்டு ஆயிரம் வேள்வி செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைப் போக்கி அதன் உடம்பை உண்ணாமல் இருப்பது நல்லது.



நெய் போன்ற பொருள்களைத் தீயிலிட்டு ஆயிரம் வேள்விகளை நடத்துவதைவிட உண்பதற்காக ஓர் உயிரைப் போக்காமலிருப்பது நல்லது.


Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share.


Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.



avisorinh thaayiram vaettalin ondran
uyirsekuth thuNNaamai nandru


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உடல் வளர்கவே உணவு என்ற எண்ணம் தவறு அருளை வளப்பதே அவசியம். உணவின் மீது ஆர்வம் அதிகரித்தால் அருள் விலகும், பொருள்கள் மீது ஆர்வம் குறைந்தால் பொருள் விலகும். உணவின் சுவை படை கொண்டவர் மனநிலைப் போல் நன்மைகளை நாடாது. உயிரின் இயல்பை வளர்க்க உணவு அவசியமில்லை. உணவிற்கு விலை கொடுக்க மறுத்தால் உற்பத்தி செய்பவரும் இல்லாமல் போவர்கள். புலன் என்ற ஒருமையின் பன்மை சொல்லாகவும் புலால் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. கொல்லாதவரை புலன்கள் அடங்கி மறுக்கப்பட்டவரை எல்லா உயிரும் போற்றும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.