திருவள்ளுவரின் திருக்குறள்

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில்.



உண்ணுவதன் காரணமாக பறிக்காது உலகம் என்றால் எந்த மனிதரும் விலைக் கொடுத்து உண்ணுவது முடியாது.



புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லா திருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார்.



தின்பதற்காகவே கொலை செய்பவர் இல்லை என்றால், இறைச்சியை விலைக்குத் தருபவரும் உலகில் எங்கும் இருக்கமாட்டார்.



புலால் உண்பதற்காக உலகினர் உயிர்களைக் கொல்லாதிருப்பின், புலால் விற்பனை செய்யும் தொழிலை எவரும் மேற்கொள்ள மாட்டார்.


'We eat the slain,' you say, by us no living creatures die;
Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy?


If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.



thinarporuttaal kollaadhu ulakenin yaarum
vilaipporuttaal oondraruvaa ril


சிவயோகி சிவக்குமாரின் அதிகார விளக்கம்:

உடல் வளர்கவே உணவு என்ற எண்ணம் தவறு அருளை வளப்பதே அவசியம். உணவின் மீது ஆர்வம் அதிகரித்தால் அருள் விலகும், பொருள்கள் மீது ஆர்வம் குறைந்தால் பொருள் விலகும். உணவின் சுவை படை கொண்டவர் மனநிலைப் போல் நன்மைகளை நாடாது. உயிரின் இயல்பை வளர்க்க உணவு அவசியமில்லை. உணவிற்கு விலை கொடுக்க மறுத்தால் உற்பத்தி செய்பவரும் இல்லாமல் போவர்கள். புலன் என்ற ஒருமையின் பன்மை சொல்லாகவும் புலால் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது. கொல்லாதவரை புலன்கள் அடங்கி மறுக்கப்பட்டவரை எல்லா உயிரும் போற்றும்.


திரு.சிவயோகி சிவக்குமார் அவர்கள் இறைவனை உணர்ந்தவர், சாதி மதத்தை கடந்தவர். தமிழில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தமிழில் உள்ள திருக்குறள், திருமந்திரம், திருவாசகம், சிவ வாக்கியம், ஞானவெட்டியான், ஔவை நூல்கள் என அனைத்திற்கும் எளிய தமிழில் விளக்கவுரை அளித்து வருகிறார். இறைத்தேடல் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவி செய்ய காத்துக்கொண்டிருக்கிறார். அவருடைய கருத்துகளை youtube, facebook மற்றும் facebook group-ல் பதிவு செய்துள்ளார். விருப்பமுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளவும்.